படித்தல்
- க. யாஸ்மின் சிராஜூதீன்
ஏன் படிக்க வேண்டும்
எதற்காகப் படிக்க வேண்டும்
என ஒரு காலகட்டத்தில் நாம் சிந்திக்கலாம்.......
படிப்பதற்கு வயது தடையில்லை ...
மனமும் எதிர்ப்பதில்லை...
நேரமில்லை என்பது நம் ஆர்வமின்மையின் வெளிப்பாடே தவிர
உண்மையில்லை.....
நம் இலக்கை அடையும்
வரையும்...
அடைந்தபின் அடுத்த இலக்கு
நோக்கி பயணிக்கவும்.....
நாம் ஆர்வம் கொள்ள வேண்டும்.....
தேடல் ஒன்றே நம்மை உழைக்க வைக்கும்...
படிப்பதற்கும் சாதனை புரிவதற்கும் வயது தடையில்லை.....
ஊக்கத்துடன் எழுவோம்
சாதனை பல புரிவோம்..... !
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)