லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க போகும் சூப்பர் ஹீரோ படத்தின் ஹீரோ இவரா?

Su.tha Arivalagan
Jun 06, 2025,04:05 PM IST

நடிகர் ஆமீர் கான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளார், இது ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ள "Sitaare Zameen Par" திரைப்படத்தின் புரமோஷனின்போது உறுதி செய்யப்பட்டது. 


இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கவுள்ளது. மேலும், ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து "Dadasaheb Phalke" திரைப்படத்திலும், மகாபாரதம் திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் ஆமிர்கான்.


ஆமீர் கான் தற்போது "Sitaare Zameen Par" திரைப்படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார். அவர் சமீபத்திய ஊடக சந்திப்பின்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக உறுதிப்படுத்தினார்.




ஆமிர்கான் கூறுகையில், லோகேஷும் நானும் ஒரு படத்தில் வேலை செய்கிறோம், அது ஒரு சூப்பர் ஹீரோ படம். இது ஒரு பெரிய அளவிலான அதிரடி படம், இது அடுத்த ஆண்டு, இரண்டாம் பாதியில் தொடங்கும். இதற்கு மேல் நான் அதிகமாக சொல்ல முடியாது என்றார்.


விக்ரம், லியோ, கைதி மற்றும் மாஸ்டர் போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் ஆமீர் கானின் முதல் கூட்டணியாகும்.


அதேசமயம் PK 2 வதந்திகளை ஆமீர்கான் மறுத்துவிட்டார். "எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. தாதாசாகேப் பால்கே படம் நிச்சயமாக தயாரிக்கப்படுகிறது. ராஜுவும் நானும் அதில் வேலை செய்கிறோம்." என கூறி உள்ளார்.


ஆமீர் கான் தனது நீண்டகால கனவு திட்டமான மகாபாரதத்தையும் பற்றி குறிப்பிட்டார். கடந்த 25 வருடங்களாக தான் அதைப்பற்றி கனவு கண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் "Sitaare Zameen Par", ஆமீர் கானின் 2007 ஆம் ஆண்டு திரைப்படமான "Taare Zameen Par" படத்தின்  தொடர்ச்சியாகும். ஆமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள "Sitaare Zameen Par" திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.