M Bharathi Tamil Poem: பெண்
- மு.பாரதி
மனதினுள்
எத்தனை ரகசியங்கள்
எத்தனை தொழில்நுட்பம் வந்ததாலும் பெண்ணின் மனதை
அறியமுடியுமா
கடலை போன்று ஆழமானவள்
சிந்தனையில் இமயம் போன்றவள்
சுறுசுறுப்பில் எறும்பை போன்றவள்
பலத்தில் யானை போன்றவள்
குணத்தில் தங்கம் போன்றவள்
பகுப்பாய்வதில்
அன்னம் போன்றவள்
உதவுவதில் கடையெழு வள்ளல் போன்றவள்
பார்ப்பதற்கு அமைதியானவள்
பழகுவதற்கு
இனிமையானவள்
குடும்பத்தை பாதுகாப்பவள்
அனைவருக்கும்
விட்டுக் கொடுப்பவள்
தோளில் தாங்கி சுமப்பவள்
தன்னை கேலி செய்பவர்களை பந்தை போல் தூக்கியெறிபவள்
அமைதியாக உலகை ஆள்பவள்
அன்பால் உலகை வெல்பவள்
தியாகத்திற்கு எடுத்துக் காட்டானவள்
ஒப்பில்லா பெருமையுடையவள்
அன்னையாக
அக்காவாக
தங்கையாக
மனைவியாக
மகளாக
பல பரிணாமங்களில்
வாழ்ந்தாலும்
பெண்ணை
மதிப்போம்
பெண்னை
போற்றுவோம்
நிலைநாட்டுவோம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64,
செங்கல்பட்டு மாவட்டம்)