வலிகள் பல தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !

Su.tha Arivalagan
Mar 08, 2026,08:43 PM IST

- சிவ ஆ மலர்விழி ராஜா


பெண்ணாய் பிறந்திடவே

பெருந்தவம் செய்தவளே.... ! 


மண்ணில்

பிறந்துதித்த

மாந்தர் குல

மணி விளக்கே.....! 


பேதை பெதும்பை

மங்கை மடந்தை என்றும் .....! 


அரிவை

தெரிவை பேரிளமென

பெண்ணினம் வளர்ந்து

போற்றிடவே..... ! 




நானிலம் போற்றும்

மங்கையென.... 


விண்ணிற்கும்

மண்ணிற்கும்

பெருமை தந்தவளே.... ! 


கண்ணின் மணியாக

கடமை கண்ணியம்

காத்திடவே.....! 


கட்டுப்பாடு என்ற உணர்வுடன்

வாழ்ந்திடவே..... ! 


கழநியில் பயிர் 

செய்து  கதிரினை 

சுமப்பவளே...... ! 


சுமைகள் பல ஏற்று

சுகத்தினை தருபவளே..... ! 


வையத்தை 

காத்திடவே

வீரத் திருமகவை

தீரமுடன்

பெற்றவளே......! 

 

மாதராய்  

பிறந்திடவே

மா தவம் செய்தவளே......! 


வலிகள் பல 

தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... ! 


சோதனைகள் பல வென்று சாதனை

படைப்பவளே....... ! 


பெண்ணினமென்ற

ஏளனபார்வை 

வென்று.....! 


எதிலும் பெண் என்று

ஏகமும் நீயானாய்..... ! 


பெண்ணே நீ வாழ்க

பெண்ணினம் சுமை என்ற பேதமை மாறிடவே..... ! 


பெண்ணே நாட்டின்

கண்கள்...... ! 


வாழ்க பெண்ணினம்

அன்பு சகோதரிகளுக்கு


இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்!