பார் போற்றும் பாவேந்தர்..!
- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
பார் போற்றும் பாவேந்தர் ...
கவி அமுதை பருகிடுவோம்.... !
கவி நடையில் காதல் மொழி கனிந்திடவே....
கருத்தை தந்து கனவுகளை கவியில் வைத்து .. ...
கார்மேக புலவனாக புவனம் போற்ற வாழுகின்றார்..... !
தமிழுக்கு அமுதமென்ற
புகழ் கொடுத்து.....
அழகாக
தமிழமுதை பருகிடவே.....
ஆனந்த கவி
படைத்து..... !
விண்ணுக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்து ......
செம்மொழியில்.....
எண்ணங்களை எடுத்துரைத்து......!
சித்திர சோலைதனில்.,....
வீரர்கள் சிந்திய
செந்நீரின்.....
பெருமைதனை
போற்றி.....
செங்கதிர் விளைந்த
தேசத்தில்.....
நெற்றி வியர்வை சிந்தும்....
உழைப்பினை புகழ்ந்து...... !
குயில் கூவும் கானமும்....
மயிலாடும் நடனமும்.......
கிளி பேசும் மொழிகளும்.....
பூக்கள் மலரும் வேளையில்.....
ஈக்கள் எடுக்கும் தேனென ......
இன்ப கவி பிறக்கும் கருவாகி..... !
சஞ்சீவி மலை சாரலில்......
பர்வத மலையின்
அழகினில்......
கண்ணுக்குள் காட்சி தந்து......
காதல் மழையில் குளிரவைத்தார்...... !
பாவேந்தர் புகழ் பாடிடுவோம்......
பாடல் சுவை அருந்தி
போற்றிடுவோம்.....
(இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்.. சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)