பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்

Su.tha Arivalagan
Mar 02, 2026,05:20 PM IST

குவைத் சிட்டி: குவைத் வான்வெளிப் பகுதியில் பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டிருப்பதாக குவைத் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த விமானங்களை வீழ்த்தியது ஈரானா என்பது குறித்துத்  தெரியவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் F-15 போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியான நிலையில் அது தற்செயலாக நடந்தாக அமெரிக்கத் தரப்பில் விளக்கம் வெளியாகிருந்தது. ஆனால் பல அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டிருப்பதாக குவைத் கூறியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.


ஈரான் இதைச் செய்ததா அல்லது ஈரானுக்கு ஆதரவாக வேறு யாரேனும் களத்தில் குதித்துள்ளனரா என்ற புதிய பரபரப்பும் கூடியுள்ளது.




ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க தயாரிப்பான F-15 போர் விமானம் ஒன்று குவைத்தில் சுழன்று கொண்டு கீழே விழுந்து நொறுங்கும் வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. 

இந்த விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. 


கீழே விழுந்த விமானம் அமெரிக்காவிற்குச் சொந்தமானதா அல்லது இஸ்ரேலுக்குச் சொந்தமானதா என்பதில் தெளிவான தகவல் இல்லை. ஏனெனில் இரு நாடுகளுமே F-15 ரக விமானங்களைப் பயன்படுத்துகின்றன. அதேசமயம், அந்த விமானத்தின் பைலட்டும், கோ பைலட்டும் பாராசூட் மூலம் உயிர் தப்பி விட்டனர்.


சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், போர் விமானம் தீப்பிடித்த நிலையில் மெதுவாகச் சுழன்று கொண்டு கீழே விழுவது போல காட்சி இருந்தது. 


இந்த நிலையில் குவைத் கூறியுள்ள தகவல் மேலும் பரபரப்பையும் பதட்டத்தையும் கூட்டுவதாக உள்ளது.