Happy Mother's day: தரணி போற்றும் நம் தாய்
May 10, 2026,02:38 PM IST
- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
அன்பும் ஆசையும் தோன்றும் போது
அரவணைப்பவள் நம் தாய்
பாசம் காட்டி நேசத்துடன் நம்மை
அணைத்துக் கொள்பவள் நம் தாய்
பண்பாய் மதிப்புடன் வளர நமக்கு பாடுபடுபவள்
நம் தாய்
நேர்மை வாழ்க்கை வாழ நமக்கு கற்றுக் கொடுப்பவள்
நம் தாய்
கண்டிப்பு காட்டி நம் வெறுப்பை வாங்கிக் கொள்பவள்
நம் தாய்
துக்கமும் துயரமும் தாக்கும்போது தோள் கொடுப்பவள்
நம் தாய்
அவள் பசி அறியாது நம் பசி தீர்த்திட நினைப்பவள்
நம் தாய்
கோவில் வேண்டாம் கோபுரம் வேண்டாம்
போற்ற வேண்டாம் தூற்ற வேண்டாம்
பிள்ளை நம்மிடம் அன்பை மட்டும் எதிர்பார்ப்பவளே
நம் தாய்.
அன்பை அள்ளிக் கொடுத்திடுவோம்
அரவணைத்தே காத்திடுவோம்
ஆதரவாய் கரம் பற்றிடுவோம்
அன்னையர் தினத்தை போற்றிடுவோம்