ஒழுக்கப் பண்பு கொள்!
Mar 17, 2026,04:47 PM IST
- டாக்டர் கோ. லதா
விதைக்குள் விருட்சம் போலவே ஒழுக்கமும்
மனித மனதிற்குள் ஒழுக்கம் நல்விருட்சம்
செல்வம் இழந்தால் சிறிது இழப்பு,
பண்பு இழந்தால் எல்லாம் இழப்பு.
நேர்மை எனும் ஆடை அணிந்து
நன்மை எனும் பண்பை வளர்த்து
பொறாமை துடைத்து தூய மனம் கொண்டு
ஒழுக்கமாய் வாழ்வதே உன்னத பண்பு
மனிதனின் அன்பு நிறைந்த பண்பும்
வாழ்வில் ஒழுக்கம் கொண்ட குணமும்
மண்ணில் தனிமனிதனை உயர்த்தும்
மாண்புமிகு வாழ்வை உலகில் அமைக்கும்
எறும்புகள்யாவும் வரிசையாய் ஊர்கிறது ஒழுக்கமே
ஒழுக்கமே மனித பண்பின் அடையாளம்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும் ஒழுக்கம் கொள்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)