என்னவள் தமிழ்!

Su.tha Arivalagan
May 25, 2026,04:47 PM IST

-பாவலர் மாயோன்மங்கை


நிலவே

நீ வளரந்து தேய்கிறாய்


மலரே

நீ  விரிந்து  விழுகிறாய்


தென்றலே

நீ நாளும் வருவதே இல்லை


துளி மழையே

நீ  எப்போதாவது வருகிறாய்


பனித்துயே

நீயோ கதிரவனைக் கண்டால் காணாமல்

போகிறாய்


விழியே

நீ இமைக்குள் அடக்கம்


வானவில்லே

நீ தோன்றியதே மறைய த்தானே




மனமே

நீ நிரந்தரமாய் இருப்பதே இல்லை


முத்தே மணியே தங்கமே

நீங்கள் உணர்வறியா

உலோகம்


இதயமே

நீ துடிப்பதும் ஓர் நாள்

நின்றுவிடும்


உயிரே

நீ காற்றல்லவா

கலைந்து சென்று விடு வாய்


எனவே

என்னவள் தமிழ்

சாவாவரம் பெற்றவள்

வளர்பிறைதான் அவளுக்கு

என்னவளே மண்ணவளே  உன்னைத்

தாயே என்பேனடி