வாழ்க்கை எதிர்நீச்சலே!

Su.tha Arivalagan
May 20, 2026,03:07 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்ந்து காட்டு செயலில்


வழக்கு வரும் 

வழுக்கல் வரும்

வலியும் பலம் 

பழியும்

விழும்


செழிப்பும் இழிவும் சேர்ந்து வரும்

துக்கமும் துயரமும் துரத்தி வரும்


வாயைத் திறந்தால் வம்புவரும்

அடைத்தாயானால் வெம்பு வரும்




விட்டுக் கொடுப்பவன்

பிள்ளைப்பூச்சி

விடாது பிடித்தால் கொல்லிக்குச்சி 


மனமே மனமே மயங்கி

விடாதே

தினமும் எண்ணி துவண்டு விடாதே


மழைத்துளிதான் அருவி யாகும்

அருவி தான் நதியாக

ஓடும்


நதி செல்லும் பாதையெல்லாம்

புல்லும் உண்டு புதரும்

உண்டு


முள்ளும் உண்டு கல்லும் உண்டு

பாம்பும் உண்டு பாறையுமே உண்டு


இதையெல்லாம்

நகர்ந்து செல்வதே நதி

கிணற்று நீராகத் தெளிவுபடு


இரும்பு பருத்தி தங்கம்

இவை  அடிபட்டு அடிபட்டு அனுபவம் பெறுகிறது


பல அனுபவம் பலமானபாடம்

நீர் சேர்கின்ற பாத்திரமே அதன் வடிவம்


நீ  நீராக இருந்தால் கடவுளுக்கும் கங்கை நீயே

இதுவே வாழ்க்கை

வாழ்க்கை அழகானது

அனுபவித்து வாழப்பழகு