பகலவன்
- க. யாஸ்மின் சிராஜூதீன்
பகலவனே ஏன் இந்த கோபம்
பூமியின் மீது ...?
மரங்களை வெட்ட அனுமதி அளித்ததாலோ....
என்ன செய்யும் பூமித்தாய் யாரிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் ...
புரிந்தாலும் கேட்டால்தானே.....
காடுகளை வீடாக்கினான் மனிதன்
வீட்டை பாலைவனமாக்குவதற்காக வா.....
யார் செய்த பிழையோ....
இருந்தாலும் உன் கருணையால்
சிறிது உன் கதிர்வீச்சின் வீரியத்தைக் குறைத்துக்கொள்...
இதமான ஒளி அளித்து
உயிர்களைக் காத்து நில்.....
உன் கோபத்தணலில் வாழுமா
உயிர்கள்...
சற்றே கருணைகொள்
உயிர்கள் மகிழ கார்முகிலுக்கும் இடம் கொடு....
சிறிது சடசடவென சிரித்து விட்டுப் போகட்டும் ...
உயிர்கள் கலகலவெனச் சிரிக்க...
பூமித்தாயும் மளமளவென தழைக்க ......
கோபமும்,அன்பும் உள்ளடங்கியதுதானே வாழ்கை...
கோடைக்காலம் என்பதால் கோபம் மட்டும் காட்டாதே....
இடை இடையே அன்பையும் காட்டிடு
உயிர்களைக்காக்கும் பகலவனே.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)