'ம்'

Su.tha Arivalagan
Jul 28, 2026,02:34 PM IST
- பசுங்கிளி

தமிழில் எனக்கு பிடித்த எழுத்து 'ம்'
பிறந்தவுடன் அம்மாவிடம் பேசியது 'ம்'
அம்மா எனக்கு தந்த முதல் முத்தம்
என் கன்னம் சிவந்தது நித்தம்
முத்தத்தில் வந்தது சத்தம்
அதில் இருக்கும் ஆயிரம் அர்த்தம்

குழந்தை பருவத்தில் நடக்கும் போது அச்சம்
பள்ளி பருவத்தில் இன்பம்
கன்னி பருவத்தில் வெட்கம்
இடைநிலை பருவத்தில் சலனம்
திருமண பருவத்தில் மௌனம்



திருமணத்திற்கு பின் 'ம்'
புகுந்த வீட்டின் உபதேசம்
இன்பத்திலும் 'ம்'
துன்பத்திலும் 'ம்'
துயரத்திலும் 'ம்'
அனுசரணையில் 'ம்'

'ம்' என்ற சொல் தாரக மந்திரம்
'ம்' என்று சொல்வோம் அனைவருடைய அன்பையும் வெல்வோம்

என்னோடு பயணிக்கும்
அனைத்து படைப்பாளிகளுக்கும்
என் கவிதையை படிப்பவர்களுக்கும்
என் கவிதைகள் பிடிக்கும்
என்று என் மனம் நினைக்கும்
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த
வணக்கம்!