வேணு கானமோ! இராம பாணமோ!"

Su.tha Arivalagan
Jul 10, 2026,10:07 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


என்னவளே!

நீ பேசும் பேச்சு எல்லாம் 

வேணு கானமோ!

உன் பார்வை வீச்சு எல்லாம் 

இராம பாணமோ!


உன் காதல் வார்த்தை எல்லாம் 

எனக்குக் குயிலின் கீதமோ!

உன்னோடு வாழும் இந்த இல்லம் 

இறைவன் ஆலயமோ!




கண்ணோடு கண் நோக்கி எனை

நீ காண்பது எல்லாம்

காவியமோ! அதை எழுத மீண்டும் 

கம்பன் பிறக்க வேண்டுமோ!


நம் இல்லம் எப்போதும் 

ஆனந்தக் குடிலோ!

அப்படி  இருப்பது

கந்தன் கருணையோ!


நீ தேவதையோ!

தேன் தமிழோ!

இத் தென்னவனின்

மனங்கவர் மங்கையோ! 


வா  ஆரணங்கே!

வணங்குவோம் இறைவனையே! 

அவன் வாழ்த்தட்டும் 

நாம் நன்றாக வாழவே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).