தலை கோதும் என் தாழம் பூவே!

Su.tha Arivalagan
Sep 18, 2026,01:47 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


என் தலை கோதும்

என் தாழம் பூவே!

அதற்காகத்  தலை வணங்குவேன்   

என் தேவதையே!


மடி சாயும் 

மார்கழியே!

மனம் மயங்கும்

அந்தி மாலையே! 


உனைப் பாடும்

என் கீர்த்தனைகள் 

என்றும் 

தெய்வீகமே! 




நான் வாங்கி 

வந்த வரம் 

உன்னோடு

வாழ்வது தானே!


என் ஆசையெல்லாம் 

பேராசை அல்ல!

எப்போதும் உனை நினைக்கும் 

பலநூறு ஆசை தானே! 


விண்ணுக்கும் மண்ணுக்கும் 

பாலம் அமைத்தால் 

அங்கும் உன் பெருமை தான் 

பேசுவேன் நானே! 


வா என்னவளே! 

வாழ்ந்திடுவோம் 

எந்நாளுமே!

வாழ்க்கை வாழத்தானே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)