உயிர் மூச்சு என்று நினைக்கின்ற என் உத்தமிக்கு அடியேன்!
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
கணவனே தனது
உயிர் மூச்சு என்று
நினைக்கின்ற என்
உத்தமிக்கு அடியேன்!
குணக்குன்றாய்
நிற்கின்ற எந்தன்
குணவதிக்கு
அடியேன்!
குலசாமி போல்
என்னைக் காக்கின்ற
என்னவளுக்கு
அடியேன்!
குழந்தையாய் எனைப்
பாவித்து வளர்க்கின்ற
உன் தாய் உள்ளத்திற்கு
அடியேன்!
நிம்மதியே என் வாழ்வில்
நிலைக்கட்டும் என வேண்டும்
உன் பக்திக்கு
அடியேன்!
ஊர் உலகம் மெச்சும் படி
எனை வாழவைக்கும்
உந்தன் அன்பிற்கு
அடியேன்!
அடிமை போல் இருந்த என்னை
அரசன் போல் வாழ வைக்கும்
உந்தன் நல்ல மனதிற்கு
அடியேன்!
எந்தன் உயிர் உள்ளவரை
உனக்கு நன்றி சொல்ல
எனைப் படைத்த இறைவனுக்கும்
அடியேன்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)