மனைவி என்கிற மாண்புமிகு மேடத்திற்கு!

Su.tha Arivalagan
Jul 27, 2026,02:25 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


இன்றைய கடிதம்: 


மனைவி என்கிற 

மாண்புமிகு மேடத்திற்கு 


சாம்பாரில் உப்பில்லை

என்று நான் கூறிய 

உப்புச்சப்பில்லாத

விஷயத்திற்குத்


தங்களுக்கு வந்த 

உச்சகட்ட கோபத்தில் 

மறந்து விட்டீர்களா 

எனத் தெரியவில்லை.




நீங்கள் 

யார்

என்று 

கேட்டு விட்டீர்கள்


பதில் கூறாவிடினும்

தங்களுக்கு மேலும்

கோபம் வரும்

என்பதால் 


நான் தங்களின் 

முந்நாள் 

இந்நாள்

வாழ்நாள் 


கணவன் என்பதைப்

பணிவுடனும் 

பயத்துடனும் 

தெரிவித்துக் கொள்கிறேன் மேடம்


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).