Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

Su.tha Arivalagan
Sep 14, 2026,01:12 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


விக்னேஸ்வரா! விநாயகா!

முழு முதற் பொருளோனே!


எவ்வினைகளும் எழுந்தோடிடும்

நின் கருணைக்கண் கண்டாலே ...


நம்பிக்கையோடு தும்பிக்கையானை 

நெஞ்சினில் நிறுத்தி நிதம் தொழுதாலே ...




வஞ்சக நிலைகளும் தவிடு பொடியாகிவிடும்...

தஞ்சமென்றோரைத் தாங்கிடுவான் உமை பாலனே !


பொருள் கொண்டு பூஜைகள் வேண்டாம் ...

அருகம்புல் கொண்டு அர்ச்சித்தாலும் ...

அல்லல் தீர்க்க அருகோடி வருவான்... 


அம்மையப்பனே உலகெனும் தத்துவத்தை ...

அவனிக்கு உணர்த்திய ஐங்கரனே ! 


என்றும் துணை நீயே!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)