Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
விக்னேஸ்வரா! விநாயகா!
முழு முதற் பொருளோனே!
எவ்வினைகளும் எழுந்தோடிடும்
நின் கருணைக்கண் கண்டாலே ...
நம்பிக்கையோடு தும்பிக்கையானை
நெஞ்சினில் நிறுத்தி நிதம் தொழுதாலே ...
வஞ்சக நிலைகளும் தவிடு பொடியாகிவிடும்...
தஞ்சமென்றோரைத் தாங்கிடுவான் உமை பாலனே !
பொருள் கொண்டு பூஜைகள் வேண்டாம் ...
அருகம்புல் கொண்டு அர்ச்சித்தாலும் ...
அல்லல் தீர்க்க அருகோடி வருவான்...
அம்மையப்பனே உலகெனும் தத்துவத்தை ...
அவனிக்கு உணர்த்திய ஐங்கரனே !
என்றும் துணை நீயே!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)