ஜெயலலிதா பிறந்தநாள்...பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா புகழஞ்சலி
டில்லி : தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு (பிப்ரவரி 24), இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில், ஜெயலலிதா குறித்து நெகிழ்ச்சியான வாழ்த்துகளையும் புகழஞ்சலிகளையும் தெரிவித்துள்ளனர்.
தலைசிறந்த நிர்வாகி - பிரதமர் மோடி புகழாரம் :
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ஜெயலலிதா அவர்களை ஒரு "தலைசிறந்த நிர்வாகி" என்று குறிப்பிட்டுள்ளார். மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பெற்ற ஒரு கவர்ச்சிகரமான தலைவராக அவர் திகழ்ந்ததை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். குறிப்பாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து எப்போதும் சிந்திக்கும் தலைவராக அவர் இருந்தார். தமிழகத்தின் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த அவரது பங்களிப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாள் செய்தியில் பிரதமர் பாராட்டியுள்ளார்.
மக்களுக்கான அர்ப்பணிப்பு - அமித் ஷா வாழ்த்து :
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள செய்தியில், ஜெயலலிதா ஒரு மாபெரும் "மக்கள் தலைவர்" என்று வர்ணித்துள்ளார். ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு போற்றத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சியை மறுசீரமைத்ததில் அவரது பங்கு முக்கியமானது என்றும், அவரது ஆட்சியின் பலன்கள் சமூகத்தின் கடைக்கோடி மனிதன் வரை சென்றடைவதை அவர் உறுதி செய்ததாகவும் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். அவரது பொதுச் சேவை எப்போதும் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.