கவிதைகள்.. கனவுகளால் இணைத்து.. காலமெல்லாம் வாழும் கலைவிழா!

Su.tha Arivalagan
Mar 21, 2026,03:53 PM IST

- தி.மீரா


கவிதை நாள் வந்தது கலைமகள் பாடலாய்

கனிவான சொற்களில் கருவிகள் மலர்கின்ற,

மனதின் ஓவியம் மெல்லிசை ஆகிட,

மௌனத்தின் மொழிகள் வரிகளில் பேசுகின்ற.

எழுத்தின் ஒளியில் எத்தனை உலகங்கள்,

எண்ணத்தின் இறக்கை எட்டாத வானங்கள்,


பாடலாய் பொங்கும் பரவச நெஞ்சங்கள்,

பார்வைக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் இங்கே.

கவிதை என்பது கண்ணீரின் சுவைதான்,

காதலின் மொழியும் காயத்தின் மருந்தும்,

சொல்லாத கதைகள் சொல்லும் கலைதான்,

சொல்லின் வழியே உயிர் பேசும் தருணம்.




கவிஞர்கள் மனதில் கனிந்திடும் நம்பிக்கை

காலத்தை கடக்கும் காற்றாக மாறுமே,

கவிதை நாள் நம்மை கனவுகளால் இணைத்து,

காலமெல்லாம் வாழும் கலைவிழா ஆகுமே.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)