கொடிது கொடிது இளமையில் வறுமை!

Su.tha Arivalagan
Oct 23, 2025,01:42 PM IST

- மலர்விழி ராஜா


சாலையின் ஒரமது......!

சாய்ந்து விழ..... 

காத்திருக்கும் மண் சுவரு.......!!!

சல்லடையை கவிழ்த்தது போல்.....

சரிந்து நிற்கும் மேற்கூரை....!!

உடைந்து கிடக்கும் பாத்திரங்கள்......! 

அங்கொன்றும்....! இங்கொன்றும்....!

அடுப்பெரிய விறகின்றி.......!

அடுத்த வேளை உணவின்றி......!




கிழிந்து தொங்கும் உடையினிலே......!

மீண்டும் மீண்டும் பின்னலிட்டு......!! 

மாற்று உடை ஏதுமின்றி......!

பாடசாலை  செல்ல வழியுமின்றி......!

பரிதவித்து ஏங்கி நின்றாள்....!

பாவம் அந்த சிறுமி அவள்.....!!

கண்களிலோ நீர் துளிகள்....!

அடுக்களையில்....

அரிசியில்லை.......!!

அன்னையின் உடலோ நலனுமில்லை....!

ஆதரிக்க யாருமின்றி.....

ஆகாயத்தை பார்த்து நின்றாள்....!!

அங்கேயும் அவசரமாய்....

மழை மேகம்.....!!

கொட்டி தீர்த்த மழையினிலே.....!

கரம் குவித்து 

குளிரினிலே கண் மூடி நடுங்கி நின்றாள்.....!!

நிற்கின்ற காட்சி அது.... "போதுமடா சாமி என்று"!!!

வறுமை மிக கொடுமை....!

கொடுமையிலும்

கொடுமை...

இளமையில் வறுமை....!!