இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்‌.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

Manjula Devi
May 23, 2025,05:08 PM IST
சென்னை: இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும். கடற்கரை பகுதிகள் மலைத் தொடர்கள், அணைகள், நீர்பிடிப்பு பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


அரபிக் கடல் பகுதிகளில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது தெற்கு கொங்கன் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிக்கு அப்பால் மத்திய கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





இந்த நிலையில்  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்‌.இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சீக்கிரமாகவே தொடங்கும். இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும். வால்பாறை, நீலகிரி (கூடலூர்) பகுதிகள் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கேரளா, காவிரி நீர்ப்பிடிப்பு, சிறுவாணி நீர்ப்பிடிப்பு, பெரியாறு நீர்ப்பிடிப்பு, பரம்பிக்குளம் நீர்ப்பிடிப்பு, கேரள கடற்கரை மற்றும் மலைத்தொடர்கள், கோவா, மகாராஷ்டிரா கடலோர மற்றும் மலைத்தொடர் பகுதிகள், மும்பை ஆகிய பகுதிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்கு மழை  காத்திருக்கின்றன என கூறியுள்ளார்.