மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!

Su.tha Arivalagan
Aug 29, 2026,12:45 PM IST

- கவிஞர் பி.எஸ் முருகேசன்

 

கடன்மேல கடன வாங்கி 

காளமாடு ரெண்டு வாங்கி


காடு வயல் உழுதும் 

இங்கே கவலை தீரலே


களனி எங்கும் 

விளைய வச்சும் கடனும் தீரலே (கடன்மேல)


வாங்க வாங்க கடனும் 

இங்கே வளர்ந்து போகுது


வரவு எல்லாம் 

வட்டிக்குள்ள 

முடங்கிப் போகுது


ஊருக்கெல்லாம் உணவு தரும் 

உழவன் பசி தீரலே

பாடுபட்டு பாடுபட்டும் 

பலனும் ஒன்னுமில்ல (கடன்மேல)




வானத்தை நம்பி

வரகு வெதச்சோம்


வானம் மழை பொழியலே


வாடிப்போகும் பயிரு 

மீட்க வழியும் தெரியலே


மண்ண நம்பும் 

மனுசனுக்கு வாழ்க்கை 

விடியலே


மாற்றம் எப்ப 

நிகழும் என்று

விடையும் புரியலே (கடன்மேல)


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)