தேடி தேடி அலையும் மனசு நொந்து தொலையும்!
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
அரக்க பறக்க
எந்திரிச்சு
ஆளாளுக்கு வேலை செஞ்சு
பிழைப்பு தேடி ஓடுவது
நகரம்
ஓடி ஓடி ஒழச்சா தான்
வாழ்க்கை அங்கே சிகரம்
இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சிரமம்
தொட்டதெல்லாம்
காசுதான்
முட்டை கூட
மாஸ் தான்
சட்டைப் பையில்
பணம் இருந்தா
கட்டைப் பையும்
சொகுசு தான்
கடை வீதியிலே
நடப்பதே ரொம்ப மிடுக்கு தான்
மெஷினைப் போல
வேலை செஞ்சும்
மிச்சம் மீதி
ஒன்னும் இல்லே
அந்த கதையை
நானும் என்ன சொல்ல
வாடகைக்கு பணம்
இல்லே
வாழ்க்கை ஒன்னும்
சுகமில்லே
நாய் போல
ஒழச்சாலும்
நாலு காசு
மிச்சம் இல்லே
தேதி ஒன்னு
பொறந்துட்டா
தேவை கொஞ்சம்
அதிகம்
தேடி தேடி
அலையும்
மனசு நொந்து
தொலையும்
ஆடம்பரம் இல்லேன்னாலும்
அவசியத்தின் தேவை
ஆட்டி வைக்கும்
மாயை
அது கொடுக்கும்
சோர்வை
அத்தனையும் எதிர்
கொண்டு
வாழ்பவன் தான்
மேதை
அவனைத் தானே
அரவணைப்பாள்
அழகு வண்ண
ராதை
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)