இதயம் பேசுகிறது!
Aug 25, 2026,04:41 PM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
சிங்கார சிட்டே.
செவ்வரளி மொட்டே
சாந்துப் பொட்டே
சைனா பட்டே
அன்ன நடையாளே
சின்ன இடையாளே
கனவாக வந்தவளே
நினைவாக நின்றவளே
கண் அசைவு
காட்டி விட்டால்
கடல் கடந்து
நான் வருவேன்
பௌர்ணமி நிலவை
பரிசாகத் தருவேன்
கண்மணி நீயும்
கரிசனம் காட்டு
இனிய கானம்
இதயம் பேசுதே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)