அழகுடனே சொலிக்குதடா ஆனந்தமும் கூட!
Jul 09, 2026,02:50 PM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
ஆலமரம் அரசமரம்
அடர்ந்த வனம் சோலை
ஆத்தங்கரை மேலே
அழகுடனே சொலிக்குதடா
ஆனந்தமும் கூட
பழங்கள் உண்ண
படையெடுத்து கிளம்பு தடா
பறவை
சேர்ந்து வளர்த்துக் கொள்ளும் உறவை
குளிர்ந்த வனத்தினிலே
குயில்கள் வந்து பாட
வண்ண மயில்கள் வந்து ஆட
ஆனந்தமாய் சோடிகளும்
ஆள வட்டம் போட
தென்றலும் தவழ்ந்து வர
திரளுதடா மேகம்
தீர்க்கும் மழை தாகம்
பார்க்க வரும் மோகம்
பருவ வயது வந்தால்
பரவசத்தில் மங்கை
அவள் பாய்ந்து வரும்
கங்கை
பொல்லாத கோபம்வந்தால்
புறப்படுவாள் தங்கை
குறுக்கே யாரும் வந்தால்
குதித்து வரும் வேங்கை
மிதித்திடுவாள் சங்கை
எதுவும் பலிக்காது இங்கே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)