Tamil Poem: ரோஜா மலர்கள்!

Su.tha Arivalagan
Jul 16, 2026,03:18 PM IST

- புலவர் சுதந்திரக்கவி ப. ஈஸ்வரநாதன் 


காலையில் பிறக்கிறேன்

மாலையில் இறக்கிறேன் 


கலர் கலராய் பூக்கிறேன் 

வாசமாய் வாழ்கிறேன் 


தென்றல் தாலாட்ட 

ஆடியே மகிழ்கிறேன் 




சூறாவளி காற்றில் 

சுழன்றும் போகிறேன்


மலர்களின் அரசியாய்  

மகுடமாய் வருகிறேன் 


முட்கள் சூழ்ந்த போதும் 

சிரித்து மகிழ்கிறேன்


ஒரு நாள் வாழ்விலும் 

மகிழ்ந்தே மலர்கிறேன் 


கனத்த இதயத்தோடு 

கல்லறையிலும் இருக்கிறேன்


கோவில் கருவறையிலும் 

வலம் வருகிறேன்


எந்த நிலையிலும் துன்பம் துறக்கிறேன்

எல்லாம்  மாயைதான் நிச்சயமற்ற வாழ்வில்!


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று  பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)