இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

Su.tha Arivalagan
Jul 23, 2026,10:31 AM IST

டெல்லி: இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய அளவில் தீங்கு விளைவித்தது நீங்கள்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் கொடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.


நீட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். இளைஞர்களின் நலனை விட பெரிது எதுவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி டிவீட் போட்டுள்ளார். இதற்கு ராகுல் காந்தி பதில் கொடுத்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது: 




நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவித்தவர் நீங்கள் தான்.


நமது கல்வி முறை முழுமையாகக் கைப்பற்றப்படுவதற்கும், சீரழிக்கப்படுவதற்கும் நீங்கள் அனுமதித்து ஊக்கமளித்தீர்கள் - மேலும் அதற்குப் பொறுப்பான அனைவரையும் பாதுகாத்தீர்கள்.


மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவானவை:


1. தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

2. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

3. அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


என்று ராகுல் காந்தி தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.