ராம் சரண் புது முடிவு... டெல்லியில் இப்போது ஷூட்டிங் வேண்டாம்.. ராஷ்மிகா படமும் ஒத்திவைப்பு
ஹைதராபாத்: டெல்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தலைநகரில் திட்டமிடப்பட்டிருந்த பல படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தெலுங்கு நடிகர் ராம் சரணின் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராம் சரண் தனது புதிய படத்திற்கான சில காட்சிகளை டெல்லியில் படமாக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 17 அன்று படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றிருந்தார். ஆனால், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பால் இந்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், படப்பிடிப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம் சரணின் புதிய படத்திற்கான சில காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது. இதற்காக செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நவம்பர் 17 அன்று படப்பிடிப்பு நடத்த குழுவுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், இப்போது படப்பிடிப்பு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்று படக் குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளிலும் படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஷாகித் கபூர், கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'Cocktail 2' படத்தின் டெல்லி படப்பிடிப்பும் செங்கோட்டை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக படப்பிடிப்பை தாமதப்படுத்தியதாக படக்குழு தெரிவித்துள்ளது.