Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!
- செ. சாந்தி சின்னத்தம்பி
அது ஒரு கனாக்காலம்...
பள்ளிக்காலம் முடிந்து
கல்லூரியில் காலடி வைக்க....
மின்மினிகள் மனதில் பறக்க எண்ணியிருந்த நேரம்....
இருந்ததோ ஓர் இருபாலர் அரசுக் கல்லூரி...
அதில் தடம் பதித்தால் தடம் மாறிட நேரிடுமோ எனத் தந்தை அஞ்சியதால்...
அஞ்சல் வழிக் கல்வியே போதுமெனத் தொடர்ந்த நேரம் ...
கல்லூரி வாழ்க்கை என்பது கனவாக... கதையாக....
மாற்றியதோ காலம் மாறியதோ சூழல்...
நனவாக இருந்திருந்தால்....
நடந்திருக்கும் யாவையும் மாறி இருக்குமோ ?...
இருள் என்னும் அஞ்ஞானம் இன்னும் விலகி இருக்குமோ? ...
எட்டு வைத்த அடிகள் வேறு ஏற்றும் தந்திருக்குமோ ?....
சட்டென்று ஒரு வெறுமை மனதில் இடராதிருந்திருக்குமோ?...
இருப்பினும் என்ன? கவி வழியே புது நடை போட...
பாதை வகுக்கவே மாற்றியதோ.... காலம்
மாறியதோ ...சூழல்!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)