புரியாப் புதிர்!
- செ.சாந்தி சின்னத்தம்பி, மதுரை
பூட்டி வைத்த மனதினிலே பிரவாகம்...
ஏனென்று அறியாத ஒரு வேகம் ...
புரியாத மௌனமும் சில நேரம் ...
புலப்படாத வினாக்களும் மனதோரம்...
அழுதோய்ந்த கண்களில் வற்றும் ஈரம் ...
ஆற்றுப்படவே ஓய்ந்தது மன பாரம் ...
காலம் மாற்றும் என மனம் தாங்கும் ...
கற்றேஇருந்தாலும் புரியாது
ஏன் இந்த சோகம்...
இறைவா உன் பதமலர் சரணடைய உளம் ஏங்கும்...
தருவாய் அமைதி என்றே தினம் தூங்கும் ...
உன் அருளால் அனைத்துமே இனி நீங்கும்
உள்ளத்தில் ஆன்ம ஒளி ஒன்றே தேங்கும் ....
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)