யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

Su.tha Arivalagan
Sep 14, 2026,01:20 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அம்மாவின் கனவு

என் நாளையா

அவள் நாளையா


--


மொய்க்காமல் போகும் ஈக்கள்

தாலம் நிறைய இனிப்புகள் 

கண்ணாடி பேழையில் 



யானை பூனையாச்சு

நீல வானத்தில் 

வெண்பஞ்சு  திரள்


--


சுறுசுறுப்பாக நடக்கிறது

தேநீர்  வியாபாரம்

சாலை ஓர விபத்து


--


தடுமாற்றம் தெரிகிறது

தந்தையின் கோபத்தில் 

வளர்ந்த பிள்ளையின் வரும்படி


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)