யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Sep 14, 2026,01:20 PM IST
- சசிகலா விஸ்வநாதன்
அம்மாவின் கனவு
என் நாளையா
அவள் நாளையா
--
மொய்க்காமல் போகும் ஈக்கள்
தாலம் நிறைய இனிப்புகள்
கண்ணாடி பேழையில்
யானை பூனையாச்சு
நீல வானத்தில்
வெண்பஞ்சு திரள்
--
சுறுசுறுப்பாக நடக்கிறது
தேநீர் வியாபாரம்
சாலை ஓர விபத்து
--
தடுமாற்றம் தெரிகிறது
தந்தையின் கோபத்தில்
வளர்ந்த பிள்ளையின் வரும்படி
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)