Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!
Jul 08, 2026,12:03 PM IST
- சசிகலா விஸ்வநாதன்
மிஞ்சியது எல்லாம் எஞ்சியவையா?
இல்லை! இல்லை!
மிஞ்சியது சில;
தஞ்சம் புகும் மண்ணில்;
எச்சம் போல்.
சில பஞ்சு போல்
காற்றில் மிதந்து
மஞ்சில் கரைந்து விடும்;
மிச்சம் இல்லாமல்.
பின்னும்
எஞ்சியவையே,
உன்னைப் பற்றி
பேசும் மேன்மை
நீ யார்? என்று;
உலகுக்குச் சொல்லும்.
உன்னை அடையாளம் காட்டும்;
உன்னதம்.
அது உன்னையும்
விஞ்சி நிற்கும்.
ஆதலின்
உன்னை விஞ்சி நில்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)