இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!

Su.tha Arivalagan
Aug 15, 2026,11:40 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


விடுதலை கிடைத்தது, 

இன்றெனுக்கு

அமெரிக்க விமான நிலையத்தில்:


காலி மனத்தின் 

வெற்று புன்னகை;

மனம் தொடா 

நன்றி நவிலல்;

புரியாத அமெரிக்க ஆங்கிலம்;




நித்தம் நித்தம்

நிலையில்லா பணி பயம்;

விசா மறுப்பின் திகில்;

சுழலில் தவிக்கும்

என் நாட்டு இளையோரின் துயரிலிருந்து!


போதைப்பொருளில் சிக்கிய அமெரிக்க இளைஞர்களின் சிதைவு; 

அன்றாடம்  துப்பாக்கி வன்முறை;

ஒற்றைப் பெற்றோரின் அவலம்;

பல்கலைக்கழக மாணவர்களின் கடன் சுமை;

தோல்வியைத் தாங்க திடமில்லா

அமெரிக்க  இளையோரின்

மன உளைச்சலில் இருந்து;

எனக்கு விடுதலை!


தாய் மண்ணே!

வணக்கம்!

தாயகம் திரும்பும்

பெற்றோரின்

மனம் அழுத்தம்

சொல்லும் பாடம்;

பாருக்குள்ளே நல்ல நாடு!

அவரவர்க்கும்,

அவருடைய நாடே!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)