காத்திருக்கும் இல்லம்

Su.tha Arivalagan
Aug 01, 2026,04:06 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அவர்கள் வானூர்தியில் சென்று விட்டனர்! 

இல்லம் அமையாகியது... 

இது 

என்ன;

எப்படி;

ஏன்; 

இந்த வினாக்களின் 

எதிரொலி   நின்றதும்;

ஒரு சங்கடம் இருந்ததோ?


மருத்துவர் , அவள்  சந்தியில் பணிக்கு சென்று அந்தியில் திரும்புவாள்! 

கணினி வல்லுநரின் அறை மூடி தாள் போட்டாயிற்று! 

அறை,

இனி,

அவள் குரலுக்கு 

மட்டுமே திறக்கும்; அந்தியில்.




ஆடாத ஊஞ்சல் ;

மீட்டாத பியானோ போல்

ஒசையற்று போனது.


உணவு மேசையும் 

வளியடுப்பும் 

காத்திருக்கின்றன!


தொலைக்காட்சி பெட்டி   

ஆழ்ந்த உறக்கத்தில்.

 

பூச்சாடிகளால் மட்டும் சும்மா இருக்க இயலவில்லை!

தமக்குள் பேசி சிரிக்கின்றன;  அவன் செவிக்குப் போகாமல்.


வீடு தனித்து விடப்பட்டது தான்;

ஆனாலும்,

தனிமையில் இல்லை!

மாலை நேர உயிர்ப்பிற்காக... 

காத்திருக்கின்றன!


உற்சாக காரொலி கேட்க;

உல்லாச இரவுக்கு

களிப்பான 

மாலை கட்டியம்  கூற.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)