காத்திருக்கும் இல்லம்
- சசிகலா விஸ்வநாதன்
அவர்கள் வானூர்தியில் சென்று விட்டனர்!
இல்லம் அமையாகியது...
இது
என்ன;
எப்படி;
ஏன்;
இந்த வினாக்களின்
எதிரொலி நின்றதும்;
ஒரு சங்கடம் இருந்ததோ?
மருத்துவர் , அவள் சந்தியில் பணிக்கு சென்று அந்தியில் திரும்புவாள்!
கணினி வல்லுநரின் அறை மூடி தாள் போட்டாயிற்று!
அறை,
இனி,
அவள் குரலுக்கு
மட்டுமே திறக்கும்; அந்தியில்.
ஆடாத ஊஞ்சல் ;
மீட்டாத பியானோ போல்
ஒசையற்று போனது.
உணவு மேசையும்
வளியடுப்பும்
காத்திருக்கின்றன!
தொலைக்காட்சி பெட்டி
ஆழ்ந்த உறக்கத்தில்.
பூச்சாடிகளால் மட்டும் சும்மா இருக்க இயலவில்லை!
தமக்குள் பேசி சிரிக்கின்றன; அவன் செவிக்குப் போகாமல்.
வீடு தனித்து விடப்பட்டது தான்;
மாலை நேர உயிர்ப்பிற்காக...
காத்திருக்கின்றன!
உற்சாக காரொலி கேட்க;
உல்லாச இரவுக்கு
களிப்பான
மாலை கட்டியம் கூற.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)