நீலத்திரைக்கடலோரம்!

Su.tha Arivalagan
Jul 13, 2026,04:55 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


அன்புக் காதலனே

தேய்பிறையாய் மாறிடவா


காதலெனும் கவி படைத்தாய் ...

ஆழ்கடலின் கொந்தளிப்பு 


என் அகக்கடலில் ஆடுதடா ...


அற்றைத் திங்களில் நீயும்

நானும் கதைத்த மொழிகள்




இன்று ஒற்றை நிலையில்

நின்று பிதற்றுதடா ...


இருள் சூழ்ந்த இந்நேரம்

மருள்கின்ற பார்வையோடு

மனசெல்லாம் கேள்வியோடு

மதி மயங்கியே நின்றேனடா ...


எங்கு சென்றாய்? 

ஏன் சென்றாய்?

காரணம் அறியாப்

பேதையாய்ப் பித்துத்

பிடித்ததடா....


என் கண்ணீரும் கடலோடு

கரைந்தே அழுகுதடா...!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)