சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!

Su.tha Arivalagan
May 18, 2026,11:12 AM IST

- அ. தாமஸ்


வறுமை என்ற புத்தகத்தைத் திறக்காமல் வளமை என்ற பக்கங்களை வாசிக்க முடியாது.


உடலைக் கெடுத்து உணர்வை சிதைப்பதும், நல் உறவைக் கொடுத்து உலகறிய உயர்த்துவதும் வறுமை. 


வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலி நிறைந்தது தான். அதை வரிவரியாய் வாசித்து வாழ்வாக்க முனைப்பவர்களே பலரின் வாழ்வை வளமாக்குகிறார்கள். 


வாசிக்கும் பொழுது வலிப்பதும் வாசித்தபின் இனிப்பதும் தான் வறுமை. ஆம் வறுமையை வாசித்தவர்கள் தான் வெறுமையைக் கூட பொறுமையாய் ஏற்று அதனையும் வளமையாய் மாற்றுகிறார்கள். 




வறுமையைக் கசப்போடு கடந்தவர்கள் தான் அதனை சுவைபட காட்சிப்படுத்துகிறார்கள். வறுமை என்பது காலநிலை போல இன்று கடந்தாலும் நாளை தொடரும். எனவே நிதானத்தை கைக்கொண்டு வறுமையை வாசிப்போம், வறுமையில் வாடுபவர்களையும் உயரிய அன்போடு நேசிப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)