சிந்தனைச் சிதறல்.. தேடல் தொடரட்டும்; கிடைத்தால் மகிழ்ச்சி இல்லையேல் பயிற்சி!
May 14, 2026,04:20 PM IST
- அ.தாமஸ்
தேடல் ஒவ்வொருவர் வாழ்விலும் ஓர் அங்கம். அது உறவிலும் உணர்விலும் பொருளாதாரத்திலும் ஏதோ ஒரு மாற்றத்தைத் தொடர்ந்து தேடுகிறது.
தேடல் வாழ்வில் தொடரட்டும்; கிடைத்தால் மகிழ்ச்சி இல்லையேல் பயிற்சி. தேடல் இல்லா வாழ்க்கை தேங்கி நிற்கும் நீரைப் போன்று இன்றோ நாளையோ நாற்றம் எடுக்கும்,தேடல் ஒன்றே வாழ்வில் மாற்றம் கொடுக்கும்.
தேடலின் இன்பம் பெறுவதில் நிறைகிறது. எனவே நினைப்பதைப் பெறும் வரைத் தொடர்வோம் தேடலை, நிறைவோம் அத்தேடலில்.
தேடல் பல வகைத் திருப்பங்களை உள்ளடக்கியது. தேடலில் இன்பம் பெற தேடலையே இன்பமாய் உணர வேண்டும். அப்பொழுதுதான் துன்பங்களைக் கடந்தும் தேடலைத் தொடர்ந்து நினைப்பதை அடையவும் அது தரும் மகிழ்வினில் நனையவும் முடியும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)