யோசனை செய்!!
- டி. கலைமணி
துன்பத்தை தூக்கி எறியுங்கள்
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் நம்மைத் தொடர்வது மிகவும் முக்கியம்..
ஏனென்றால் ஒரு ஈசிஜியில் கூட ஒரு நேர்கோடு என்றால் நாம் உயிருடன் இல்லை என்று அர்த்தம் .
மனிதன் முகம் வாடியது போல் தோன்றக் காரணம் அவனது மனம்
கவலைகள், சிந்தனைகள், ஆசைகள் கனவுகள், இன்பமயக்கம், பாசப்போராட்டம் போன்றவற்றின் கனத்தால் எப்போதும் அழுத்திக் கிடப்பது தான்
இன்பமோ துன்பமோ சற்று பொறுங்கள். அதை கவனித்துப் பாருங்கள். அது நகர்வதை நீங்கள் கவனிக்கும் போதே காணலாம். தயவு செய்து துன்ப காலத்தில் இருந்து வெளியேறி இத்தருணத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள்.
சோதனைக் காலத்தில் பொறுமையாய் இரு
மேகங்கள் மூடிக் கொண்டால் சூரியன் கூடப் பிரகாசிக்க முடியாது. நீயும் நானும் எம்மாத்திரம்
அடித்து துவைத்து சசக்கி பிழிந்த துணிகள் காயவைத்து மடித்த பின்புதான் அழகாய் தெரியும்.
வாழ்க்கையும் அப்படித்தான் ..
காலம் நம்மை கசக்கி பிழிந்தாலும் அழகாய் மாற்றும் வரை அமைதியாய் இருப்போம்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)