சிந்தனை.. நேர்மையாக பேசிப்பார் எதிரிகள் வரிசையில் இருப்பாய்!
- டி. கலைமணி
பெண்கள்
அடுத்தவர்களை சார்ந்து வாழும் நிலை வந்தால் அவமானத்தைத் தாங்கிக்கிட்டே வாழ்க்கையை கட க்க வேண்டியதா இருக்கு. அது பணமாக இருந்தாலும் சரி பாசமாக இருந்தாலும் சரி !
உண்மை! உண்மை! உண்மை!..
நேர்மையாக பேசிப்பார் எதிரிகள் வரிசையில் இருப்பாய்!
அவர்களுக்கு தகுந்த மாதிரி பேசிப்பார் உறவுகள் வரிசையில் நீயே முதலில் இருப்பாய்!!
விடா முயற்சி
வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட விதை கூட மரமாக வளர்ந்து வருகிறது.... உன்னை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர் மத்தியில் இருந்து எழுந்து வா வாழ்க்கையில் உன்னை வெல்ல யாரும் இல்லை.
மனிதர்களை திருப்திப்படுத்த இது வரை யாரும் வழி கண்டு பிடிக்க முடியவில்லை .
ஏதாவது குறை கண்டு பிடிப்பதில் அனைவரும் புத்திசாலிகள்.
நேர்மையாக வாழ்ந்தால், தைரியம் தானாகவே வரும். என்பதை வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உணரலாம்.
உங்களால்
ஒருவரை உயர்த்தி
விட முடியும் என்றால்
தயங்காதீர்கள். பணம்
கொடுத்து உயர்த்தி
விட முடியாவிட்டாலும் பரவாயில்லை..
உன்னால் முடியும்
என்ற நம்பிக்கை தரும்
வார்த்தைகளை கொடுங்கள்
குழப்பமான இடத்தில்
தெளிவாக பேசுங்கள்.
பிரச்சினையான
நேரத்தில் தீர்வு பற்றி பேசுங்கள். வருத்தமான சூழலில் ஆறுதலாய் பேசுங்கள். மன அழுத்தம் உள்ளவர்களிடம் உற்சாகப் படுத்திப் பேசுங்கள்.
மனிதரில் பலர்
சத்தம் போட்டு சொல்லும்
உண்மையை நம்ப மாட்டார்கள்.
கிசுகிசுக்கும் பொய்யைதான்
காது கொடுத்து
கேட்பார்கள்
ஒரு மென்மையான சொல் ,ஒரு கனி வான தோற்றம், ஒரு ஆரோக்கியமான புன்னகை இவை மூன்றும் இருந்தால் பல அற்புதங்களைச் செய்ய முடியும்.
வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பது போல் இல்லை ஆனால் நீ நினைத்தபடி மாற்றலாம் நீ முயற்சித்தால்
மட்டும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி 64 வயதுக்காரர். பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)