Tamil Love poem: என் அருமைக் காதலியே!

Su.tha Arivalagan
May 23, 2026,11:59 AM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


பௌர்ணமி நிலவாக 

பவனி வரும் என்னவளே


செங்காந்தள் மலராக 

செக்கச் சிவந்தவளே


பாவாடை தாவணியில் 

பக்கம் வந்து நின்னவளே


முத்தான பல் வரிசை 

காட்டிச் சிரித்தவளே


மாமாங்கம் காத்திருந்து 

மணமுடிக்கச் சொன்னவளே




கானக் குயிலாக 

கவிதை ஒன்னு தந்தவளே


மீன் விழி கண்ணாலே 

மின்னுகிற சின்னவளே


மகத்தில் பிறந்த 

மகராசி நீதானே


தவமாய் பிறந்த 

தங்கமே தாரகையே


காவியமே ஓவியமே

காத்திருப்பேன் உனக்காக


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)