Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

Su.tha Arivalagan
May 23, 2026,12:33 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


நைந்து போன பிய்ந்த செருப்பு

கணக்கற்ற குத்துகளுடன்

நூலின் கனம் தாங்காமல்

ஊசலாடும் உயிரென

வீசப்பட்டும் தன் இணையைத்

தேடும் அவலம்.


தெரு திரும்பியதும் தான்

கேட்டது, அந்த இன்னொன்று

என் இணை எங்கே

கேளாத ஒலி

ஒலிக்காத இசை

கேட்டிலையோ; உனக்கு




தேடிப் போ! என்  இணையை

இணையின்றி நான் 

நாதம் ஒலிக்க இசையேன்

உனக்குப் புரிகிறதா; 

தெரிகிறதா என் அவலம்!


என் சோடு அன்றி

என்னால் செலுத்த இயலுமா?

இதை வெளியிடத்தான் முடியுமா

வாயில்லா சீவன்தான். நான்

மனமும் இல்லையா, எனக்கு!