கண் மை!

Su.tha Arivalagan
Jan 22, 2026,04:03 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


என்னமாயம் செய்தாளோ 

கண்ணாலே....

என் மனதை காணவில்லை 

தன்னாலே...

கண்மை செய்த வசியமோ

என்னை இழந்தேன் உன்

ஓரப் பார்வையிலே...

ஓலைக்கூடிசையில் வாழத்தான் 

ஓயாமல் பாரத்தாயா கண்ணான 

கண்மணியே...!




என் தாரகையே 

தாய்உள்ளம் கொண்ட பெண்மணியே...

கண்மையே எங்களை திருமணபந்தத்தில்

இணைத்த பெருமையே....

என்றும் கருகருவென 

என்னவளின் கண்ணில் ஜொலிப்பாய்... 

காந்தக்கண்ணாய்..

காலம்காலமாக..!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)