உன்னை அறிந்தால்!
May 18, 2026,11:30 AM IST
- வே.ஜெயந்தி
உன்னை அறிந்தால்
உலகம் சிறு துளியாகும்;
உள்ளம் தெளிந்தவுடன்
கவலைகள் காற்றில் கரையும்.
வானம் எனும் பரந்த கூரையின் கீழ்,
பூமி எனும் இல்லத்தில்
அனைவரும் ஒரே பயணிகள் என்பதை
ஆன்மா அமைதியாக உணரும்.
இறைவன் அருளிய இந்த உடல்
காற்று நிரம்பிய ஓர் பைதான்;
ஆனால் அதற்குள் ஒளிர்வது
உன் உள்ளத்தின் உண்மை அழகு.
தெளிந்த சிந்தனையும்
தூய அன்பின் நினைவுகளும்
மனித வாழ்வை மணக்கும்
மலர்களாய் மலர்கின்றன.
அது அமைதியின் அர்த்தமாய்
ஆழத்தில் மலர்ந்து நிற்கும்.
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)