யாராகப் பிறக்க ஆசை?
May 02, 2026,02:09 PM IST
- வே. ஜெயந்தி
கடவுள் தந்த இந்த மேடையில்,
நான் நானாகப் பிறக்க ஆசை.
பிறர் பாராட்டும் குணமுடன்,
பாசமாய் வாழ்ந்திட ஆசை.
அனைவரும் விரும்பும் மனதுடன்,
அன்பை பகிர்ந்திட ஆசை
.
அழகான முகம் மட்டுமல்ல,
அழகான உள்ளம் பெற ஆசை.
பொய்யின்றி வாழும் பாதையில்,
உண்மையை சொல்லிட ஆசை.
யாராகவும் அல்ல இந்த வாழ்வில்,
நான் நானாக இருப்பதே ஆசை.
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)