ஒன்றாய் நிற்கும் ஒளி!
Feb 05, 2026,03:32 PM IST
- வே.ஜெயந்தி
ஒன்றாய் நிற்கும் ஒளி
கடவுள் தந்த ஞான ஒளி.
மாணவர்களின் உள்ளத்தில்
வந்து மெதுவாய் ஒளிரும் போது,
ஆசிரியரின் அருமை
அர்த்தம் பெற்று தெரிகிறது.
பெற்றோரின் கண்களில்
பெருமையாகப் பிரகாசிக்கும் அந்த நொடியில்
பள்ளி முழுவதும் ஒலிக்கிறது
ஆனந்த ராகம்.
அந்த ராகத்தில்
நேற்றைய வலிகள் மறைந்து,
இன்றைய கனவுகள்
இசையாக மாறுகின்றன.
இது சுமையா?
இல்லை இது பொறுப்பு;
நாளையை உருவாக்கும்
புனித பொறுப்பு.
பெற்றோரின் கடமை,
ஆசிரியரின் அர்ப்பணம்,
மாணவரின் முயற்சி
மூன்றும் ஒன்றானால்,
உலகமே ஒளிரும்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)