இரு விழிகள்!
Mar 21, 2026,03:27 PM IST
- வே.ஜெயந்தி
மௌனத்தில் பேசிய
வார்த்தைகள் விழிகளில்,
மனதில் மறைந்திருக்கும்
எண்ணங்களின் பிரதிபலிப்பு அவை.
சொல்ல முடியாத சோகமும்
சொல்லத் தயங்கும் மகிழ்ச்சியும்,
ஒரே நேரத்தில் பதியும்
அந்த இரு சிறு உலகங்கள்.
மீன்கள் நீந்தும் நீர்போல்
மிதக்கும் கண்ணீர் துளிகள்,
மனத்தின் ஆழத்தை
மெதுவாக வெளிப்படுத்துகின்றன.
அன்பும் கணிவும் நிரம்பி
அருகில் நிற்கும் போது,
ஆறுதலாய் மாறும்
அந்த இரு விழிகள்.
கோபம் வந்தாலும் கூட
கனிவை மறக்காதவை,
மனிதன் சொல்வதைக் காட்டிலும்
விழிகள் சொல்வது உண்மை.
இதயம் பேசும் மொழி அது
பாசத்தின் நிலையான சாட்சி.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)