யாரை நம்பலாம்!
Jun 05, 2026,03:40 PM IST
- வே.ஜெயந்தி
அகத்தில் அன்புடனும்
முகத்தில் உண்மையான
புன்னகை புரிவோரை
நம்பலாம்.
நேற்று ஒரு பேச்சு, இன்று
ஒரு பேச்சு, நாளை ஒரு
பேச்சு என்று இல்லாமல்,
எப்போதும் ஒரே பேச்சு
பேசுவோரை நம்பலாம்.
மலர் ஒருநாளும்
தன்னை அழைப்பதில்லை;
அதன் அழகினாலே
அனைவரையும் ஈர்க்கும்.
அதுபோல் நாளும் நல்ல நாள்,
அனைவரும் நல்லவர்கள்
என்ற எண்ணம் வேண்டும்.
நல்ல மனம் கொண்டோரிடம்
நம்பிக்கை நிலையாகும்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)