பெரும்பதம்

Su.tha Arivalagan
Aug 14, 2026,02:55 PM IST

- வே. ஜெயந்தி


அஞ்சி நீ வாழ்வதும்,

கோழைத்தனம் கொள்வதும்

உன் வாழ்வின் வழியல்ல;

இழந்து விடாதே பெரும்பதம்.


காதலை நெஞ்சில் வைத்து,

அன்பெனும் மூன்றெழுத்தை

ஆயுள் முழுதும் சுமந்து வாழ்ந்தால்,

அடைந்திடுவாய் பெரும்பதம்.


உலக மக்களின் துயர் கண்டு,

ஞானத்தின் ஒளியால்

அவர்களின் கண்ணீரைத் துடைத்து,

அடைந்திடுவாய் பெரும்பதம்.


தைரியமும் அன்பும்,

கருணையும் பணிவும்

கைகோர்த்து நடந்திடும் பாதையே

மனிதன் அடையும் பெரும்பதம்.




பிறர் நலனில் உன் நலம் காணும்

பேருள்ளம் கொண்டவரே,

காலம் கடந்தும் போற்றப்படும்

அழியாத பெரும்பதம் பெறுவாய்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)