வசந்த நவராத்திரி!
- கலைவாணி ராமு
நலங்கள் யாவும் தருபவளே
நவராத்திரி நாயகி....
பரத்வாஜ் ஆசிரமத்தில் தோன்றியதே
வசந்த நவராத்திரி...
அயோத்தி இளவரசன் சுதர்சனும் சசிகலாவும் ஆரம்பித்ததே
இந்த வசந்த நவராத்திரி....
பகல் பொழுதில் கொண்டாடப்படும்
சக்தி வாய்ந்த நவராத்திரி
இந்த வசந்த நவராத்திரி....
ராமரும் காட்டில் இராவணனை அழிக்க
கடைபிடித்தது இந்த
வசந்த நவராத்திரியை தான்....
இந்த வசந்த நவராத்திரியில்
முதல் நாள் அன்னபூரணி தாய்க்கும்....
இரண்டாம் நாள் காமாட்சி அம்மனுக்கும்...
மூன்றாம் நாள் மீனாட்சி அம்மனுக்கும்....
நான்காம் நாள் விசாலாட்சி அம்மனுக்கும்.....
ஐந்தாம் நாள் மாரியம்மாவுக்கும் ....
ஆறாம் நாள் சாகம்பரி அம்மனுக்கும்...
ஏழாம் நாள் மகாலட்சுமி அமைக்கும்....
எட்டாம் நாள் மகா கௌரி அமைக்கும்....
ஒன்பதாம் நாள் புவனேஸ்வரி அம்மைக்கும்.....
விழா கோலமாக பகல் பொழுதில் கொண்டாடப்படுவது
வசந்த நவராத்திரியில்
அம்மனை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் அடைவோம்