இயற்கை நீதி!
Sep 01, 2026,09:46 AM IST
- விஜயலக்ஷ்மி கண்ணன்
பூமியின் கோபம்
யாரைத் திருத்திடவோ?
வானத்தின் ஆர்ப்பாட்டம்
யாரை நிலைப்படுத்த?
இடர்கள் பலவும் கண்டோம்
பேர் இடர்களும்
கண்டு கொதித்தோம்!
மாண்டவர்கள் பலர்
மண்ணோடு புதைந்தவர்கள் பல நூறு
மீண்டவர்கள் ஒரு சிலரே!
இயற்கையின் நியதியை
செயற்கை முறை கொண்டு
எதிர்த்தால்
நடக்கும் விபரீதம் நில
நடுக்கம்
அடக்க முடியா கோரத் தாண்டவம்!
மனிதன் மனம் மாறினானா?
தர்மம் எனும் பாதையில் நடந்தானா?
கொடுமைகள் நிறுத்தினானா?
பிறர் சொத்தை கொள்ளையடித்தான்.
பிறர் மனைவியை அபகரித்தான்.
குள்ளநரி வேஷம் போட்டான்.
குல்லா போட்டு
நோகடித்தான்.
அன்னையின் கோபம்
அவன் கண்டு கொள்ளவில்லை.
அவனும் கண் எதிரே காணாமல் போய் விட்டான்.
நீதிக்கு கண் இல்லை!
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)